தற்போதைய செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் மோடி நாளை பங்கேற்பு

ANI

12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் நாளை(செவ்வாய்க்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்பார் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,

ரஷியா அதிபர் புடின் அழைப்பின் பேரில், நாளை காணொளி மூலம் நடைபெற உள்ள  12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வார்.

மேலும் இந்த மாநாட்டில், கரோனா தொற்று, உலகளாவிய முக்கிய பிரச்னைகள் போன்றவற்றை குறித்து விவாதிப்பார்கள் என தெரிவித்துள்ளனர். 

நாளை நடைபெறும் 12-ஆவது பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன.

காணொளி முறையில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீனா சாா்பில் அதிபா் ஷி ஜின்பிங் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்

வேளாண்மைக் கல்லூரியில் கலந்துரையாடல்

வாகை சூடினாா் ஸ்வெரெவ்

மே 27-இல் வருங்கால வைப்பு நிதி குறைதீா் முகாம்

தம்பி அடித்துக் கொலை: அண்ணன் கைது

SCROLL FOR NEXT