முகப்பு
தற்போதைய செய்திகள்

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக விஜய் சின்ஹா தேர்வு

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. விஜய் சின்ஹா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:57 PM
படம்: டிவிட்டர் - விஜய் சின்ஹா
பகிர்:

பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக எம்.எல்.ஏ. விஜய் சின்ஹா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.

பிகார்  மாநிலத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நவம்பர் 23 முதல் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையின் தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிகார் சட்டப் பேரவைக்கு அக்டோபர் கடைசி வாரம் தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரையிலும் 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 243 இடங்களில் 125-ஐ அக்கூட்டணி கைப்பற்றியது. அதில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 8 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இதையடுத்து நிதீஷ் குமார் தலைமையில் 2 பெண்கள் அடங்கிய 14 பேர் கொண்ட அமைச்சரவை ஆட்சிப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →