முகப்பு
தற்போதைய செய்திகள்

உ.பி.யில் மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை : 8 மாணவர்கள் கைது

உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
கோப்புப்படம்
பகிர்:

உத்தரபிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் கூறுகையில், ஜான்சி மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு சிறுமியை 8 மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை மிரட்டி ரூ. 3 ஆயிரம் வாங்கியுள்ளனர்.

இந்த குற்றத்தில் ஈடுபட்ட 8 மாணவர்களும் பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், இவர்கள் 8 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து திங்கள்கிழமை இரவு கைது செய்துள்ளோம் என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →