தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து 5 பேர் பலி

UNI

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் திங்கள்கிழமை வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாகாணம் ஒகாரா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரை திங்கள்கிழமை அதிகாலை இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் மற்றும் குழந்தைகள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இடிபாடுகளில் சிக்கி பலியாகினர், மேலும் 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தவுடன் காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், வீட்டின் மேற்குரை பாழடைந்த நிலையில் விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரி ஒருவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குன்றேறி யானைப் போர் காணல்!

ஐபிஎல் இறுதிப்போட்டி: சன்ரைசர்ஸ் பேட்டிங்!

சுவடிகள் காத்த திருவாவடுதுறை ஆதீனம்

இலவச பயிற்சியுடன் ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

சிலம்புப் பயண சிறப்புக் காட்சிகள்

SCROLL FOR NEXT