முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:14 PM
சிதம்பரத்தில் நியாய விலைக்கடை பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
பகிர்:

சிதம்பரம்: தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம்  சிதம்பரம் நகரில் நியாயவிலைக் கடைகள் 2-வது நாளாக அடைக்கப்பட்டு இருந்தன.

நியாய விலைக்கடை பணியாளர்கள்  அனைவருக்கும் கரோனா  பரிசோதனை செய்ய வேண்டும், தொற்றால் பாதிக்கப்பட்ட இருந்ததால் அவர்களுக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும். 

கரோனாவால் இறந்த பணியாளர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரில் 168 கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிதம்பரத்தில் பெரியார் தெருவில் உள்ள  கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகம் முன் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் சேகர் தலைமையில் மாவட்ட துணை தலைவர் நடராஜன், ஜெயபால், பிரம்மரச்சர், சிவராமன், ராமகிருஷ்ணன், தக்ஷிணாமூர்த்தி உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →