பாகிஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த விமானப்படையின் விமானம் செவ்வாய்க்கிழமை திடீரென்று விபத்துக்குள்ளானது, இதில் விமானி வெளியே குதித்து உயிர்தப்பினார்.
பாகிஸ்தானின் பிண்டிகேப் மாவட்டத்தில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடந்துள்ளது. இதில் சென்ற விமானி வெளியே குதித்ததால் உயிர் தப்பினார். மேலும் விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக விமானப்படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தாண்டில் பாகிஸ்தான் விமானப்படையின் 5 விமானங்கள் விபத்துக்குள்ளானது, இதில் 3 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.