முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜார்கண்டில் ரூ. 2,584 கோடி மதிப்பில் பட்ஜெட் தாக்கல்

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பருவகால கூட்டத் தொடக்க நாளான இன்று ரூ. 2,584.82 கோடி மதிப்பிலான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

Updated On : 18 செப்டம்பர், 2020 at 3:27 PM
சட்டமன்ற கூட்டத்திற்கு வந்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரென்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:52 PM

ஜார்கண்ட் மாநில சட்டமன்றத்தின் பருவகால கூட்டத் தொடக்க நாளான இன்று ரூ. 2,584.82 கோடி மதிப்பிலான துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

ஜார்கண்ட் சட்டமன்ற கூட்டத்தின் முதல் நாளான இன்று மாநில நிதியமைச்சர் ராமேஸ்வர் ஓரான் ரூ. 2,584.82 கோடி மதிப்பிலான துணை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் அதிகபட்சமாக பேரிடர் மேலாண்மைத் துறைக்கு ரூ. 912.33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 548.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், நகர்புற மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 363 கோடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 312.26 கோடி மற்றும் ஊரக வளர்ச்சி (பஞ்சாயத்து ராஜ் பிரிவு) ரூ. 211 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.