ஒடிசா உயர்நீதிமன்றத்தின் பல பிரிவுகளில் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சுத்தகரிப்பு பணிக்காக 2 நாள்கள் நீதிமன்றம் மூடப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற பதிவாளர் கூறுகையில்,
ஒடிசா உயர் நீதிமன்றத்தில் பல பிரிவுகளில் ஊழியர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் முழு வளாகத்தையும் சுத்திகரிக்கும் நோக்கத்திற்காக செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாள்கள் மூடப்படும் என தெரிவித்தார்.