ஜம்மு-காஷ்மீரில் 550க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்தார் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா.
ஜம்மு-காஷ்மீர் காவல் துறையில் 2007ல் இருந்து நிலுவையில் இருந்த 550 க்கும் மேற்பட்ட காவல் அதிகாரிகளுக்கு தற்போது காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் பதவி உயர்விற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய மனோஜ் சின்ஹா, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கையாண்டு, ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்காக போராடுபவர்கள் எங்கள் காவல் படையினர், அவர்களின் பணி உயர்வு குறித்த பொறுப்பு எங்களுடையது என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.