முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டில் வீரர்கள் ஈடுபடவில்லை: சிஆர்பிஎஃப் விளக்கம்

மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஏப்ரல், 2021 at 2:04 PM
பகிர்:

மேற்கு வங்கத்தில் 4 வாக்காளர்களை சிஆர்பிஎஃப் வீரர்கள் சுடவில்லை என மத்திய ரிசர்வ் காவல் படை மறுப்பு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 44 தொகுதிகளுக்கான 4-ஆம் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கூச்பிகார் மாவட்டத்தில் சிதல்குச்சி பகுதியில் வாக்களிப்பு நடந்து கொண்டிருந்தபோது நடந்த தகராறில் 4 வாக்காளர்களை மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

Advertisement

இதுகுறித்து சிஆர்பிஎஃப் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,

கூச் பெஹாரின் சிதல்குச்சி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட ஜொர்பட்கி வாக்குச்சாவடிக்கு வெளியே 4 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.  இந்த வாக்குச்சாவடியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பணி அமர்த்தப்படவில்லை. மேலும், இந்த சம்பவத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபடவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.