மகாராஷ்டிரத்தில் அனைத்து வயதினருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம்
மகாராஷ்டிரத்தில் அனைத்து வயதினருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் அனைத்து வயதினருக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் கூறியது, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என்றார்.
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் மாநிலங்களின் பட்டியலில் ஹரியாணா இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.