முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா தடுப்பு நடவடிக்கை: ராணுவ தளபதியுடன் மோடி ஆலோசனை

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதி நரவணேவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

Updated On : 29 ஏப்ரல், 2021 at 2:42 PM
பகிர்:

கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ தளபதி நரவணேவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

நாள்தோறும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நாடு முழுவதும் மருத்துவமனைகளில் படுக்கை, ஆக்ஸிஜன் உள்ளிட்டவைக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்காலிக கரோனா சிறப்பு மருத்துவமனைகளை ராணுவ வீரர்கள் உருவாக்கி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், ராணுவ தளபதி நரவணேவுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இதில், தற்காலிக சிறப்பு கரோனா மருத்துவமனைகளை உருவாக்குவது, ஆக்ஸிஜன் உற்பத்திக்கு ராணுவ வீரர்களின் உதவிகள், ராணுவ மருத்துவமனைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கபட்டதாக தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.