தற்போதைய செய்திகள்

மின் மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம்

DIN

மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதல் முறையாக வேளாண் துறைக்கு தனி நிதிநலை அறிக்கை இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். 

அப்போது பேசிய அவர், ''நடப்பு நிதி ஆண்டில் 1700 நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ரூ.5 கோடி செலவில் புனரமைக்கப்படும்.

முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்துக்காக ரூ.114.68 கோடி ஒதுக்கப்படும்.

ரூ. 1 லட்சம் வரை 100 சதவிகித மானியத்தில் 500 பண்ணைக்குட்டைகள் அமைக்க ரூ. 5 கோடி செலவிடப்படும். 

மானியத்தில மின்மோட்டார் பம்பு செட்டுககள் திட்டம் சார்பாக விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மேலும், 50 உழவர் சந்தைகளை புனரமைத்து நவீனப்படுத்த ரூ.12.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT