ஹரியாணாவில் சட்டப்பேரவையை நடத்தக்கோரி எதிர்க்கட்சியினர் பேரணி 
தற்போதைய செய்திகள்

ஹரியாணாவில் சட்டப்பேரவையை நடத்தக்கோரி எதிர்க்கட்சியினர் பேரணி

ஹரியாணாவின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக வியாழக்கிழமை சென்றனர்.

ANI

ஹரியாணாவின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை நடத்தக்கோரி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக வியாழக்கிழமை சென்றனர்.

நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் மற்றும் பட்ஜெட் கூட்டத்தை கூட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் சட்டப்பேரவையை கூட்டாததை எதிர்த்து, எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் இருந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பேரணியாக ஆளுநர் மாளிகை நோக்கி சென்றனர்.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஹூடா கூறியதாவது,

நாங்கள் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நடத்தக்கோரி பல முறை கேட்டும் நடத்தவில்லை. வேளாண் சட்டத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும். இந்த அரசு நம்பகத்தன்மையை இழந்துவிட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT