நாடு முழுவதும் 2020-இல் 965 நிலநடுக்கங்கள் பதிவு: மத்திய அரசு
நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு ரிக்டர் அளவு 3க்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 2020ஆம் ஆண்டு ரிக்டர் அளவு 3க்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.29 முதல் நடைபெற்று வருகின்றன. இதில் 2020ஆம் ஆண்டு பதிவான நிலநடுக்கங்கள் குறித்து மக்களவையில் மத்திய அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மக்களவையில் அளித்த பதிலில்,
கடந்த ஆண்டில்(2020) நாடு முழுவதும் ரிக்டர் அளவு 3க்கு மேல் 965 நிலநடுக்கங்கள் பதிவாகின. அதில் 13 நிலநடுக்கங்கள் தில்லி சுற்றுப்பகுதியில் பதிவாகியுள்ளன.
மேலும் நிலநடுக்கங்கள் குறித்த ஆரம்ப எச்சரிக்கையை வழங்க தற்போது எந்தவொரு நிரூபிக்கப்பட்ட தொழில்நுட்பமும் நாட்டில் இல்லை என தெரிவித்தார்.