உ.பி.யில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்.10 முதல் பள்ளிகள் திறப்பு
உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்உ.பி.யில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்.10 முதல் பள்ளிகள் திறப்பு
உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகரித்து வரும் தொற்று பரவல் காரணமாக உத்தரப்பிரதேசத்தின் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது தள்ளிப்போனது.
இந்நிலையில் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மாநிலத்தில் 6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கும், மார்ச் 1ஆம் தேதி 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியானது.
முன்னதாக கடந்த மாதம் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.