மகாராஷ்டிரத்தில் 3 ஆண்டுகளில் 4,243 மனித உரிமை மீறல் வழக்குகள் பதிவு
மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4,243 மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 4,243 மனித உரிமை மீறல் சம்பந்தப்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் பதிவு செய்துள்ள வழக்குகள் குறித்து உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் தகவலின்படி,
மகாராஷ்டிர மாநிலத்திலிருந்து தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு 2018 - 2019 ஆண்டில் 2,366 புகார்கள் மற்றும் 2019 - 2020 ஆண்டில் 1,877 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.