‘கலவரத்தை விரும்பினால் பாஜகவிற்கு வாக்களியுங்கள்’: மம்தா
கலவரத்தை விரும்பினால் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பேசினார்.
கலவரத்தை விரும்பினால் பாஜகவிற்கு வாக்களியுங்கள் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி புதன்கிழமை பேசினார்.
மேற்குவங்க மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், அனைத்து கட்சித் தலைவர்களும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மால்டா பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் மம்தா பேசுகையில்,
பாஜகவை ஆட்சிக்கு கொண்டுவருவது கலவரங்களை ஊக்குவிக்கும் செயலாகும். நீங்கள் கலவரத்தை விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்.
நான் தனியாக இல்லை, மக்கள் ஆதரவு எனக்கு உள்ளது ஆகையால் என்னை தோற்கடிக்க முடியாது. நான் உயிரோடு இருக்கும் வரை மேற்குவங்கத்தில் பாஜகவை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்தார்.