தற்போதைய செய்திகள்

பிப்.27-ல் மீண்டும் தமிழகம் வருகிறார் ராகுல்

DIN

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தோ்தல் பிரசாரத்துக்காக பிப்ரவரி 27-இல் தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்காக தேசிய தலைவர்கள் தொடர்ந்து தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராகுல்காந்தி ஏற்கெனவே ஜனவரி 14-இல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண்பதற்காக தமிழகம் வந்திருந்தாா். அதைத் தொடா்ந்து ஜனவரி 23 முதல் மூன்று நாள்கள் கோவை, திருப்பூா், கரூா், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில் பிப்ரவரி 27-ஆம் தேதி ராகுல்காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளாா்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது,

வருகின்ற பிப்ரவரி 27ஆம் தேதி தமிழகம் வரவுள்ள ராகுல் காந்தி மார்ச் 1 வரை மொத்தம் 3 நாள்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.

கடந்த பிப்ரவர் 14ஆம் தேதி சென்னை வந்த பிரதமா் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT