சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: 8 பேர் கொண்ட குழு அமைப்பு
சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை செய்ய 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தூர் அருகே ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து விசாரணை செய்ய 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் பிப்ரவரி 12ஆம் தேதி மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 20 பேர் பலியாகினர். இதையடுத்து, பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்படுள்ளார்.
இந்நிலையில், பத்திரிகை செய்தியை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்வழக்கை விசாரிக்க 8 பேர் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது.