தற்போதைய செய்திகள்

மார்ச் 1-ல் கூடுகிறது பஞ்சாப் பட்ஜெட் கூட்டத்தொடர்

DIN

பஞ்சாப் சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெறும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

நிகழ்வாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களும் நடத்தி வருகின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநில பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட செய்தியில்,

மாநில சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 1ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தொடரின் போது, 2021-22 நிதியாண்டிற்கான பட்ஜெட் மார்ச் 8ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக சுகாதார நெறிமுறைகளை பின்பற்றி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் தொண்டை வலி, இருமலுடன் காய்ச்சல்: சீசன் நோயாக மாறியதா கரோனா?

பாலியல் புகாரில் சிக்கியவர்கள் மீது நடவடிக்கை: எச்டி குமாரசாமி உறுதி

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT