முகப்பு
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
தற்போதைய செய்திகள்

விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுக்கு தயார்: மத்திய அமைச்சர்

தில்லியில் போராடு வரும் விவசாயிகளுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

தற்போதைய செய்திகள்

விவசாயிகளுடன் அடுத்த கட்ட பேச்சுக்கு தயார்: மத்திய அமைச்சர்

தில்லியில் போராடு வரும் விவசாயிகளுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் (கோப்புப்படம்)
பகிர்:

தில்லியில் போராடு வரும் விவசாயிகளுடன் அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர தோமர் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, தில்லி எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநில விவசாயிகள் கடந்த 3 மாதங்களாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுடன் மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவாா்த்தை நடத்தியும் எந்த முன்னேறமும் ஏற்படவில்லை. 11-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை கடந்த ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, ஜனவரி 26-ஆம் தேதி நடந்த விவசாயிகளின் டிராக்டா் பேரணி வன்முறையில் முடிந்தது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சர் கூறியதாவது,

11 கட்டப் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. நாங்கள் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம். வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் தற்போதைக்கு வேளாண் சட்டங்களை அமல்படுத்த முடியாது. உச்சநீதிமன்றம் அமைத்தக் குழு அவர்களின் அறிக்கையை நீதிமன்றத்திற்கு இன்னும் தாக்கல் செய்யவில்லை எனத் தெரிவித்தார்.

விவசாயிகள் பிரச்னை தொடா்பான வழக்கை கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், வேளாண் சட்டங்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை நிறுத்திவைக்க உத்தரவிட்டது. அத்துடன் 4 போ் கொண்ட சமரசக் குழுவையும் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →