முகப்பு
தற்போதைய செய்திகள்

தில்லியில் மேலும் 585 பேருக்கு கரோனா

தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 585 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:10 PM
கோப்புப்படம்
பகிர்:

தில்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 585 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில்,

இன்று புதிதாக 585 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மொத்த பாதிப்பு 6,25,954 ஆக உயர்ந்துள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 21 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளதால் மொத்த பலியின் எண்ணிக்கை 10,557 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்றில் இருந்து 717 பேர் குணமடைந்துள்ளதால் மொத்தம் 6,10,039 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 5,358 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →