மத்திய வேளாண்மை மற்றும் உழவர்கள் நலத்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரி 
தற்போதைய செய்திகள்

‘உச்சநீதிமன்றம் அமைத்த குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம்’: மத்திய அமைச்சர்

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ANI

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவை ஏற்றுக் கொள்வோம் என்று மத்திய வேளாண்துறை இணை அமைச்சர் கைலாஷ் செளத்ரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண் சட்டங்களை அமல்படுத்த தற்காலிகமாக தடைவிதித்து, விவசாயிகளுடன் பேசுவதற்காக குழு ஒன்றை அமைத்து உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

இதுகுறித்து மத்திய இணை அமைச்சர்  கைலாஷ் செளத்ரி கூறியதாவது,

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்கள் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளது. வேளாண் சட்டங்களை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம்.

இருப்பினும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, வரவேற்கின்றோம். உச்சநீதிமன்ற குழுவின் முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் துப்பாக்கியை எடுத்தால் பீரங்கியால் பதிலடி- பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அமித் ஷா எச்சரிக்கை

தென்காசியில் நவ. 9இல் சிறைக் காவலா், தீயணைப்பாளா் பணிகளுக்கான எழுத்துத் தோ்வு

காரைக்குடி அருகே நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் 5,000 பனைவிதைகளை நடவு செய்ய திட்டம்

சிறுபான்மையினருக்கு பொருளாதார மேம்பாட்டு சிறப்பு கடன்

SCROLL FOR NEXT