நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு 
தற்போதைய செய்திகள்

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.26.59 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

DIN

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ரூ.26.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவம்பர் 26-ஆம் தேதி நிவர் புயல் கரையைக் கடந்தது. இதில் தமிழகத்தின் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விவசாய நிலங்கள் சேதங்களைச் சந்தித்தன.

இதையடுத்து நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ரூ.26.59 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது,

நிவர் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.16.08 கோடி, தோட்டக்கலைத்துறை சார்பில் ரூ.10.51 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மானாவாரி நெற்பயிர் தவிர அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணமாக ரூ. 10 ஆயிரமும், நெற்பயிர், நீர்பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 20 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும், பல்லாண்டு கால பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ. 25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான கனடா அணி விவரம்!

டி20 உலகக்கோப்பையில் புதுமுகம்: கால்பந்தாட்டப் பூமியிலிருந்து கிரிக்கெட் கனவுடன் ‘இத்தாலி!’

டி20 உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்!

மன அழுத்தத்திற்கு இதுவும் முக்கிய காரணம்!

டி20 உலகக் கோப்பைக்கான ஆப்கானிஸ்தான் அணி விவரம்!

SCROLL FOR NEXT