கருப்புப் பூஞ்சைக்கு 30,000 மருந்து குப்பிகள் தேவை: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்காக உடனடியாக 30,000 மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு தமிழக முதல்வர் இன்று எழுதிய கடிதத்தில்,
தமிழகத்தில் இதுவரை 673 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகையால் மத்திய அரசு இதுவரை ஒதுக்கியுள்ள 1,790 மருந்ர்து குப்பிகள் சிகிச்சைக்கு போதுமானதாக இல்லை.
எனவே உடனடியாக 30,000 ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.