செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பூசி தயாரிப்பு மையத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநர் சுஜித்ரா இலா தலைமையில் 5 பேர் ஆய்வு செய்து வருகிறார்கள்.
கடந்த வாரம் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தில்லிக்கு நேரில் சென்று செங்கல்பட்டு நிறுவனத்தில் தடுப்பூசி உற்பத்தியை தொடங்குவது குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து மனு கொடுத்தார்.
இந்நிலையில், கோவேக்ஷின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக்குடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியதையடுத்து, செங்கல்பட்டில் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகிறார்கள்.