தற்போதைய செய்திகள்

ஆந்திரத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு

ANI

ஆந்திர மாநிலத்தில் தளர்வுகளுடன் ஜூன் 20ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

ஆந்திரத்தில் கடந்த மே 5 முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜூன் 10ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டித்து சில தளர்வுகளை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 

அத்தியாவசியப் பொருள்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 8 மணிமுதல் மதியம் 2 மணிவரை செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவ சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT