தற்போதைய செய்திகள்

நாட்டில் இதுவரை 28,252 பேருக்கு கருப்புப் பூஞ்சை: ஹர்ஷ வர்தன்

DIN

நாடு முழுவதும் இதுவரை 28,252 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாராதத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், சமீபகாலமாக கருப்புப் பூஞ்சை நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தியில்,

நாடு முழுவதும் 28 மாநிலங்களில் 28,252 பேருக்கு கருப்புப் பூஞ்சை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 86 சதவீதம் பேர் ஏற்கனவே கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். 62.3 சதவீதம் பேர் சர்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 6,339 பேரும், அதனைதொடர்ந்து குஜராத்தில் 5,486 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT