தமிழகத்திற்கு ஜூன் மாதத்தில் 42.58 லட்சம் கரோனா தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் பல தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடும் பணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், ஜூலை 2 வரை தமிழகத்திற்கு வரவுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை தற்போது வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவத் துறை வெளியிட்டுள்ள செய்தியில்,
ஜூன் 3 முதல் ஜூலை 2 வரை மொத்தம் 42,58,760 கரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 13,43,820 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 3,30,560 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்த 21,55,180 கோவிஷீல்டு தடுப்பூசிகள், 4,29,200 கோவேக்சின் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.