பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய் இன்று கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் முதல்வர் மம்தாவை சந்திக்கவுள்ளார்.
திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், தற்போது மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து பாஜகவின் துணைத் தலைவராக உள்ள முகுல் ராய் தனது ஆதரவாளர்களுடன் மீண்டும் திரிணமூல் காங்கிரஸின் இணையவுள்ளார் என சமீபகாலமாக தகவல் வெளியாகின.
அந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கொல்கத்தாவில் உள்ள திரிணமூல் கட்சி அலுவலகத்திற்கு தற்போது முகுல் ராய் வந்துள்ளார். இது மேற்குவங்க அரசியலில் பெரும் எதிர்பார்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடைபெறவுள்ளதாக மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.