முகப்பு
தற்போதைய செய்திகள்

பஞ்சாப் முதல்வர் வீட்டின் முன்பு அகாலி தளம் கட்சியினர் போராட்டம்

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டின் முன்பு சிரோமணி அகாலி தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:24 AM
பகிர்:

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டின் முன்பு சிரோமணி அகாலி தளம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாள்களாக தனியார் மருத்துவமனைகளுக்கு அதிக விலையில் கரோனா தடுப்பூசி விற்கப்பட்டதாக மாநில அரசின் மீது புகார் எழுந்துள்ளது.

இதனை தொடர்ந்து சிரோமணி அகாலி தளம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று முதல்வர் வீட்டை முற்றுக்கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால், அகாலி தளம் கட்சியினர் மற்றும் காவல்துறையினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.