முகுல் ராய் 
தற்போதைய செய்திகள்

திரிணமூலில் இணைந்த முகுல் ராயின் ‘இசட்’ பாதுகாப்பு வாபஸ்

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராயின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

ANI

திரிணமூல் காங்கிரஸில் இணைந்த பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராயின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவிற்கு எதிராக போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து திரிணமூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முகுல் ராய், மீண்டும் திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜி முன்னிலையில் கடந்த வாரம் இணைந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் சிபிஆர்எஃப் வீரர்களால் வழங்கப்பட்டு வந்த ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை இன்று மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. எனினும், மாநில அரசின் காவல்துறையால் முகுல் ராயிக்கு தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? பிரவீன்ராஜ் விளக்கம்

ராஜமௌலி பட ஷூட்டிங்கில்... பிரியங்கா சோப்ரா!

ஷேக் ஹசீனாவின் மரண தண்டனை வங்கதேசத்தின் உள்நாட்டு விவகாரம்: சீன அரசு கருத்து!

நானே நானா... பாஷ்மினா ரோஷன்!

பார்வை ஒன்றே போதுமே... சேஷ்விதா கனிமொழி!

SCROLL FOR NEXT