மம்தாவுக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்தார் சுவேந்து அதிகாரி
மேற்குவங்க தேர்தலில் மம்தாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
மேற்குவங்க தேர்தலில் மம்தாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திரிணமூல் காங்கிரஸின் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில், சுவேந்து அதிகாரி பாஜக சார்பில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
சில நாள்களுக்கு முன் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சுவேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் மம்தா போட்டியிட்டால் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என சவால் விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.