முகப்பு
தற்போதைய செய்திகள்

மேற்குவங்கம், அசாமில் நாளை(மார்ச் 20) மோடி பிரசாரம்

மேற்குவங்கம் மற்றும் அசாமில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

Updated On : 19 மார்ச், 2021 at 7:43 PM
பிரதமர் நரேந்திர மோடி
பகிர்:

மேற்குவங்கம் மற்றும் அசாமில் நாளை முதல் இரண்டு நாள்களுக்கு பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார்.

அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு வரும் 27 முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் கட்சித் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நாளை(மார்ச் 20) அசாமின் சாபுவா மற்றும் மேற்குவங்கத்தின் கரக்பூர் பகுதிகளில் மோடி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

“நாளை மற்றும் மறுநாள் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு செல்கிறேன்.
நாளை கரக்பூர் மற்றும் சாபுவா ஆகிய இடங்களில் நடைபெறும் பேரணிகளில் பேசுவேன். எனது உரைகளின் போது பாஜகவின் வளர்ச்சித் திட்டங்களை விரிவாகக் கூறுவேன். வரவிருக்கும் தேர்தலில் இரு மாநில மக்களும் தேசிய ஜனநாயக கூட்டணியை தேர்ந்தெடுக்க விரும்புகின்றனர் என்பது தெளிவாக உள்ளது”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.