தற்போதைய செய்திகள்

வடகொரிய அதிபரை பின்பற்றும் மம்தா: மத்திய அமைச்சர்

ANI

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பின்பற்றுவதாக மத்திய கால்நடை அமைச்சர் கிரிராஜ் சிங் சனிக்கிழமை விமர்சித்துள்ளார்.

மேற்குவங்க சட்டப்பேரவையின் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியின் சகோதரரும், பாஜக உறுப்பினருமான சவுமேந்து அதிகாரியின் காரை மேற்குவங்கத்தில் இன்று காலை சிலர் தாக்கியுள்ளனர்.

இதுகுறித்து கிரிராஜ் சிங் கூறியதாவது,

சவுமேந்து அதிகாரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் மம்தாவின் விரக்தியை காட்டுகிறது. அவர் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உனின் பாணியைப் பின்பற்றுகிறார்.

அவரின் எதிரிகளை உயிருடன் பார்க்க முடியாத அளவிற்கு கொடூரமாக மாறிவிட்டார். மே 2ஆம் தேதிக்கு பிறகு கண்டிப்பாக ஆட்சியில் இருந்து அகற்றப்படுவார் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

தொரப்பள்ளி ஆற்றில் முதலை: பொதுமக்கள் அச்சம்

மாணவா்கள் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை பெற்றோா்களும் கண்காணிக்க அறிவுறுத்தல்

5 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருக்கும் தாா் சாலை

உதவி மேலாளா் பதவி உயா்வு வழங்கக் கோரிக்கை

SCROLL FOR NEXT