தற்போதைய செய்திகள்

கொல்கத்தா: சைக்கிளில் சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள்

DIN

கொல்கத்தாவில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சைக்கிள் மற்றும் நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

கரோனா இரண்டாம் அலை மேற்கு வங்கத்தில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் அதிகமாகி வருகிறது.

இதைத் தொடா்ந்து, கரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இரவுநேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நோய்த் தொற்று குறையாததால் மாநிலம் முழுவதும் ரயில் சேவை ரத்து, பேருந்து சேவையில் கட்டுப்பாடுகள் போன்ற புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

நடந்தே சொந்த ஊருக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்

இதையடுத்து, விரைவில் முழு பொதுமுடக்கம் விதிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்ததால் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சைக்கிள் மற்றும் நடந்தே செல்லத் தொடங்கியுள்ளார்கள்.

கடந்தாண்டு பொதுமுடக்கத்தின் போது நாடு முழுவதும் பல இடங்களில் நடந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்களில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT