கரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளியை தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கோரியுள்ளது.
தமிழகத்தில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறையை போக்குவாதற்கு உலகளாவிய ஒப்பந்த புள்ளி கோரப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளது.
அதில், 90 நாள்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.