மிக அதிதீவிர புயலாக குஜராத்தின் மஹுவா-போர்பந்தர் இடையே டவ்-தே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது.
அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலின் வெளிச்சுற்று கடந்த நிலையில் புயலின் கண் பகுதி கரையை அடைந்துள்ளது.
மிக அதிதீவிர புயலாக டவ்-தே மஹுவா-போர்பந்தர் இடையே கரையை கடப்பதால் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது.
புயல் கரையைக் கடக்கும் நிலையில், குஜராத், மகாராஷ்டிரம் கடலோரப் பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது.