ஊரடங்கு விதிமீறல்: சென்னையில் 10 நாள்களில் 32,980 வழக்குகள்
சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக கடந்த 10 நாள்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் ஊரடங்கை மீறியதற்காக கடந்த 10 நாள்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதையடுத்து, தமிழகத்தில் கடந்த மே 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கமும், மே 24ஆம் தேதி முதல் தளர்வற்ற முழு பொதுமுடக்கமும் அமலில் உள்ளது.
இந்நிலையில் பொதுமுடக்க விதிமுறைகளை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து இன்று காவல்துறை வெளியிட்ட செய்தியில்,
சென்னையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக கடந்த 10 நாள்களில் 32,980 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கு காலத்தில் தேவையின்றி வெளியே சுற்றியவர்களின் 35,629 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.