தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே ரூ. 2 லட்சத்திற்கு ஒரு வயது பெண் குழந்தை விற்பனை

DIN

விருதுநகர்: விருதுநகர் அருகே செவல்பட்டி ஒரு வயது பெண் குழந்தையை ரூ. 2 லட்சத்திற்கு விற்றது தொடர்பாக 8 பேரிடம் சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் அருகே சேவல் பட்டியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவரது கணவர் முருகன் உயிரிழந்த நிலையில் ஒரு வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கலைச்செல்வி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்காக கோவையைச் சேர்ந்த கார்த்திக் நடத்தும் திருமண தகவல் மையத்தை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது கலைச்செல்வி தனக்கு பெண் குழந்தை இருப்பதை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து குழந்தையை விற்க இருவரும் முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில் சிவகாசியை சேர்ந்த செண்பக மூர்த்தி செண்பகராஜன் ஆகியோர் உதவியுடன் மதுரையைச் சேர்ந்த கருப்பசாமி பிரியா தம்பதியருக்கு ரூ.2 லட்சத்திற்கு குழந்தையை விற்று உள்ளனர்.

இதுகுறித்த தகவல் சமூக நலத்துறைக்கு அக்கிராம மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சூலக்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு கலைச்செல்வி அவரது தந்தை கருப்பசாமி மற்றும் கார்த்திக் உட்பட 8 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT