முகப்பு
தற்போதைய செய்திகள்

மணிப்பூரில் காலை 9 மணி நிலவரப்படி 11% வாக்குகள் பதிவு

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:35 AM
கோப்புப்படம்
பகிர்:

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மணிப்பூா் சட்டப்பேரவைத் தோ்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநில சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட தோ்தல் பிப். 28-ஆம் தேதி நடைபெற்றது.

இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மீதி உள்ள 22 தொகுதிகளுக்கான இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 92 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தற்போது அங்கு காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.