சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு திங்கள்கிழமை அரசு சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தலைமை வகித்து மரியாதை செலுத்துகிறார். 
தற்போதைய செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்தநாள் விழா: சங்ககிரியில் அரசு சார்பில் மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்தநாளையொட்டி சேலத்தில் அவரது நினைவுச்சின்னத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

DIN

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன்சின்னமலை பிறந்தநாளையொட்டி சேலத்தில் அவரது நினைவுச்சின்னத்தில் அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 2013ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சங்ககிரி அருகே உள்ள ஈரோடு பிரிவு சாலையில் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. அதனையடுத்து அவரது பிறந்த நாளையொட்டி நினைவுச்சின்னம் அமைக்கப்பட்ட இடத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலையின் உருவப்படத்திற்கு அரசு சார்பில்  சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

மக்களவை உறுப்பினர்கள் நாமக்கல் ஏ.கே.பி.சின்ராஜ், சேலம் எஸ்ஆர்.பார்த்திபன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) எ.தணிகாசலம், வட்டாட்சியர் எஸ்.பானுமதி, சங்ககிரி பேரூராட்சித்தலைவி மணிமொழிமுருகன், துணைத்தலைவர் இரா.வ.அருண்பிரபு, பேரூராட்சி செயல் அலுவலர் வ.சுலைமான்சேட், திமுக ஒன்றியச் செயலர் கே.எம்.ராஜேஷ், நகரச் செயலர் கே.எம்.முருகன், சங்ககிரி பேரூராட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: திருச்சி சிவா குற்றச்சாட்டு

முன்னாள் ராணுவத் தளபதி நூலை மேற்கோள்காட்ட அனுமதிக்காதது ஏன்? ராகுல் விளக்கம்

10 மாநிலங்களில் தேடுதல் நடத்தி சைபா் குற்றவாளி கைது-சி.பி.ஐ நடவடிக்கை

மத்திய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழகம்: மாநிலங்களவையில் திருச்சி சிவா குற்றச்சாட்டு

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT