கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

கருணாநிதி பிறந்தநாளில் சத்துணவில் இனிப்புப் பொங்கல்: அமைச்சர் அறிவிப்பு

பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.

DIN

பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமூக நலன் மட்டும் மகளிர் உரிமைத்துறையில் பல புதிய அறிவிப்புகளை அமைச்சர் கீதா ஜீவன் இன்று வெளியிட்டார். 

அதில் ஒரு அறிவிப்பாக, பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளில்(ஜூன் 3) இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர்கள் அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளில் சத்துணவு குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவது போன்று இனி வரும் ஆண்டுகளில் கருணாநிதியின் பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவுடன் ஒப்பந்தம் : அனைத்து வணிக ஒப்பந்தங்களுக்கும் தாய்! ஐரோப்பிய யூனியன்

உணவு வழங்கி, ஸ்டிக்கர்கள் ஒட்டி மக்களுக்கு விசில் சின்னத்தை அறிமுகம் செய்யும் தவெகவினர்!

இந்திய அணிக்காக 10 ஆண்டுகள்..! ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா நெகிழ்ச்சி!

”அவருக்கு இல்லாத அழுத்தம் எங்களுக்கு மட்டுமா?” செங்கோட்டையனுக்கு டிடிவி பதில்!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 19 காசுகள் மீண்டு ரூ.91.71ஆக நிறைவு!

SCROLL FOR NEXT