தற்போதைய செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: இளம்பெண் பலி

DIN

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் சிக்கி இளம்பெண் ஒருவர் பலியானார். 

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்த கேசவன்(50) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை மார்க்நாதபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று சுமார் 90 அறைகளில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் சனிக்கிழமை வழக்கம் போல் இந்த பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. 

இதில் மதியத்திற்கு மேல் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் வைத்திருக்கும் ஒரு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து இந்த தொழிற்சாலையில் உள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் வெடித்துச் சிதறின. இந்த தீ விபத்தில் அந்த அறையில் இருந்த தொழிற்சாலையின் மார்க்நாதபுரத்தைச் சேர்ந்த கணக்காளராக பணியாற்றி வரும் ஜெயசித்ரா(24) என்ற பெண் தீ விபத்தில் சிக்கி உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் இந்த தீ விபத்தில் பட்டாசு தொழிற்சாலை பணியாளர்களின் 12-இருசக்கர வாகனங்களும் தீயில் கருகின. இந்த பட்டாசு ஆலை தீ விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT