கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

முதுமலையில் வளர்ப்பு யானை தாக்கி பாகன் பலி!

முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

DIN


முதுமலை தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானை தாக்கியதில் பாகன் பாலன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம், முதுமலை தெப்பக்காடு பகுதியில் யானைகள் வளா்ப்பு முகாம் உள்ளது. இங்கு 28 வளா்ப்பு யானைகள் வனத் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. 

இந்நிலையில், முகாமில் வளர்ப்பு யானை மசினிக்கு பாகன் பாலன் வெள்ளிக்கிழமை காலை உணவு கொடுப்பதற்காக அருகில் சென்றதாகத் தெரிகிறது. அப்போது யானை தாக்கியதில் பாகன் பிரசாந்த் பாலன்(55) படுகாயம் அடைந்தாா். 

இதையடுத்து பாகன் பாலனை சக பாகன்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே, 2019 இல் சமயபுரம் கோயிலில் இருந்த மசினி யானை தாக்கியதில் பாகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT