முகப்பு
தற்போதைய செய்திகள்

அசாமில் மதுவுக்கு அடிமையான 300 போலீஸாருக்கு விருப்ப ஓய்வு அளிப்பு!

அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:54 PM
கோப்புப் படம்
பகிர்:

குவாஹாட்டி: அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், காலிப்பணியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அசாம் காவல்துறையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சுமார் 300 அதிகாரிகளுக்கு விருப்ப ஓய்வு அளிக்கப்படுவதாகவும், அதே வேளையில் அதிகப்படியான மது அருந்துவது அவர்களின் உடல் பாதிக்கப்படுவதால்  அவர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டம் (வி.ஆர்.எஸ்) அரசு வழங்கியுள்ளது.

ஆட்சிப் பரவலாக்கம் குறித்தும் பணிபுரிந்து வருவதாகவும், 126 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் துணை ஆணையர் அலுவலகத்திற்கு முன்னர் வழங்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட அலுவலகங்களைத் திறப்பதற்கான செயல்முறையை முன்னெடுத்துள்ளதாகவும் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →