விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!
அமெரிக்காவில் சாவியை விழுங்கியதால் இறந்த நெருப்புக் கோழி பற்றி...
ஷபிகா, கான்சாஸ்: அமெரிக்காவில் கான்சாஸ் மாகாணத்திலுள்ள ஷபிகா விலங்கியல் பூங்காவில் பணியாளர் ஒருவரின் சாவியை விழுங்கியதால் நெருப்புக் கோழி உயிரிழந்தது.
கரேன் என்ற ஐந்து வயதான இந்த நெருப்புக் கோழி அதன் வசிப்பிட வேலியைத் தாண்டி வந்து, பணியாளரின் சாவியை விழுங்கிவிட்டது.
இந்த சாவியால் ஏற்படக் கூடிய பாதிப்பை அறுவைச் சிகிச்சை அல்லது வேறு வழியில் குறைத்துக் கோழியைக் காப்பாற்ற அமெரிக்கா முழுவதும் வல்லுநர்களிடம் ஆலோசனை கலக்கப்பட்டது. எனினும், கெடுவினையாக இந்த முயற்சியால் எவ்விதப் பலனும் ஏற்படவில்லை.
Advertisement
Advertisement
கடந்த வியாழக்கிழமை பணியாளரின் கரங்களிலேயே கரேன் உயிர்துறந்ததாக ஷபிகா பூங்காவின் இடைக்கால இயக்குநர் ஃபான் மோசர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த கரேன் வெறும் கோழி அல்ல, எங்கள் சமுதாயத்தின் போற்றத்தக்க உறுப்பினரும்கூட என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த கரேன் என்ற நெருப்புக் கோழி, 2023 ஏப்ரல் முதல் இந்தப் பூங்காவில் இருந்துவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.