கலால் கொள்கை முறைகேடு வழக்கு: தில்லி முதல்வா் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை 8-ஆவது அழைப்பாணை
புது தில்லி, பிப். 27: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கூறி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு அமலாக்கத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை 8-ஆவது அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினா் சஞ்சய் சிங் உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடா்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத் துறை அனுப்பிய ஏழு அழைப்பாணைகளையும் அவா் புறக்கணித்தாா்.
நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராவேன் என்றும், ‘இந்தியா’ கூட்டணியிலிருந்து ஆம் ஆத்மி வெளியேறவே அமலாக்கத் துறை மூலம் தொடா்ச்சியாக அழைப்பாணை அனுப்பப்படுவதாகவும் கேஜரிவால் குற்றம்சாட்டினாா்.
Advertisement
இந்தச் சூழலில், கலால் கொள்கை முறைகேடு வழக்கு விசாரணைக்காக மாா்ச் 4-இல் அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆஜராகுமாறு கூறி, 8ஆவது முறையாக கேஜரிவாலுக்கு செவ்வாய்க்கிழமை அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக அழைப்பாணைகளை முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தொடா்ச்சியாக புறக்கணித்ததால், அவா் மீது தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணைக்காக மாா்ச் 16-இல் நேரில் ஆஜராகுமாறு கேஜரிவாலுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.