இலங்கைத் தலைநகர் கொழும்பில் மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருக்கும் மக்கள்... 
சிறப்புச் செய்திகள்

இலங்கை செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்னும் சில நாள்களில் இலங்கை செல்லவிருக்கிறார்.

DIN

இலங்கையின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நிலையில்  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இன்னும் சில நாள்களில் இலங்கை செல்லவிருக்கிறார்.

இந்தத் தகவல்களை இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை மட்டுமின்றி மாலத்தீவுகளுக்கும் செல்லும் ஜெய்சங்கர், இரு தரப்பு பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்பதுடன், பல்வேறு உடன்பாடுகளிலும் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாகித் அழைப்பின் பேரில் வாரக் கடைசியில் மாலத்தீவிலுள்ள அட்டுவிற்குச் செல்கிறார்   ஜெய்சங்கர்.

பின்னர் இலங்கை வந்து, மார்ச் 28 முதல் 30 ஆம் தேதி வரை தங்கியிருக்கும் ஜெய்சங்கர், பல்வேறு பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதுடன், செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப - பொருளாதார ஒத்துழைப்பு முனைப்புக் கூட்டத்திலும் பங்கேற்கிறார்.

உணவுப் பொருள்களில் தொடங்கி, எரிபொருள், காகிதம் எல்லாவகையான பற்றாக்குறைகளாலும் மக்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமான நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணம் அமைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT